தொழில்நுட்ப தகவல்கள் பிரதானம் புதியவை

தென்னை வளர்ப்பில் தாய் தாவர தேர்வு

இலங்கையின் தென்னைத் துறைக்குத் தேவையான அதிக திறன் கொண்ட விதைப் பொருட்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தென்னை விதைத் தோட்டங்களின் திறன் போதுமானதாக இல்லை.

(cri.gov.lk/ta/advisory-circulars)

அதிக மரபியல் திறன் கொண்ட தென்னந்தோப்புகளை நிறுவ மாற்று நடவடிக்கையாக அதிக விளைச்சல் தரும் தாய் தாவர விதை மற்றும் சிறந்த இயல்புகளை கொண்ட விதைகளைத் தேர்ந்தெடுப்பது இன்றியமையாத நடைமுறையாகும்.

தாய் தாவர தேர்வு

அதிக விளைச்சல் தரும் தோட்டங்களைக் கண்டறிந்து தோட்டத்திற்குள் அதிக விளைச்சல் தரும் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும்

ஆரோக்கியமான உறுதியான மற்றும் நேரான தண்டு நெருக்கமாக அமைந்துள்ள இலை வடுக்களை கொண்ட தாய் தாவரத்தை தெரியவும்

கீழே குறிப்பிட்டுள்ளபடி விரும்பத்தக்க விவசாய அம்சங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட அதிக விளைச்சல் தரும் தொகுதிகளில் இருந்து தனிப்பட்ட தென்னை களைத் தேர்ந்தெடுக்கவும்.

கோள வடிவில் அமைந்ததும் நன்கு வளர்ந்த இலைகளை கொண்டதுமான உச்சிப்பகுதிணை கொண்ட தாவரம்

நன்கு முதிர்ந்த பருமனான முழுமையாகத் திறக்கப்பட்ட கொத்துக்களுடன் 25-30 தேங்காயை கொண்ட தாவரத்தை தெரியலாம்

குட்டையான மற்றும் தடிமனான இலைக்காம்புகள் கொத்துக்களுக்கு உறுதியான ஆதரவை வழங்கும் தாவரத்தை தெரியலாம்

குறுகிய மற்றும் வலுவான கொத்து தண்டுகள்.

அதிக எண்ணிக்கையில் நடுத்தர அளவிலான தேங்காயை கொண்ட தாவரத்தை தெரியலாம்

ஆண்டுக்கு 75 காய்களுக்கு மேல் விளையும தாவரத்தை தெரியலாம்

1.5 ஏக்கருக்கு குறையாத பெரிய தொகுதிகளை தேர்வு செய்யவும்.

ஏக்கருக்கு குறைந்தது 55 பனைமரங்கள் உள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும்

15 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

 

கீழ்கண்ட தன்மையுள்ள தாய் தாவரங்களை தவிர்க்கவும்

  • நீண்ட, ஒல்லியான பாளைக் காம்புள்ள மரங்கள்
  • நீண்ட, ஓல்லியான, சிறிய காய்கள் அல்லது வெற்றுக் காயுள்ள மரங்கள்
  • மாற்றுக் காய்ப்பு தன்மையுள்ள மரங்களைத் தவிர்க்கவும்
  • அதிக குருத்து உதிர்வு தன்மையுள்ள மரங்கள்
  • தகுந்த சூழலில் வளராத மரங்கள்

தேர்ந்தெடுக்கப்படாத மரங்களில் இருந்து காய்களை ஏற்றுதல் மற்றும் போக்குவரத்தில் கலப்பதைத் தவிர்க்கஇ குறியிடப்பட்ட கூட்டல் மரங்களின் தேங்காய்களை களை தனியாக அறுவடை செய்வது விரும்பத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட காய்களை உடனடியாக நர்சரிகளில் இடுவதே சிறந்த நடைமுறை. நர்சரிகளில் இடுவது தாமதமானால்இ நீர் இழப்பைக் குறைப்பதற்காக காய்களைக் குவித்து நன்கு மூட வேண்டும்.

முதிர்ச்சி அடையாத கெட்டுப்போனஇ வெற்றுஇ சிறிய மற்றும் சிதைந்த காய்களை நர்சரிகளுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு நிராகரிக்கப்பட வேண்டும். நாற்றங்கால்களில் இடுவதற்கு கடினமாக இருக்கும் பெரிய காய்களும் நிராகரிக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அளவுகோல்களின்படி தேர்ந்தெடுக்கப்படும் தோட்டத்தைப் பற்றி விவசாயிகள் தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திற்குத் தெரிவிக்கும்போதுஇ தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தங்கள் தோட்டங்களில் உள்ள பனைகளைத் தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உதவலாம்.

 

Related posts

error: Alert: Content is protected !!