இதன் பின்னர் வாழையை அதிகளவில் உற்பத்தி செய்வதற்கான பதிவுகளை நீங்கள் முகநூல்களில் மற்றும் பிற சமூக தளங்களில் காண நேரிடலாம். சில அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆலோசனையும் வழங்கலாம் ஆயினும் விவசாயிகளுக்கு நன்மை செய்யவிரும்பும் நல்ல உள்ளங்கள் தங்களது ஆர்வத்தை சரியான தகவல் தொகுப்பு பெற்றும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திய பின்னர் வெளிப்படுத்தவும்.
ஏனெனில் கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையிலும் பெறுமதி சேர் பொருட்களை உருவாக்குதல், சந்தை வாய்ப்புக்கள் பற்றிய எந்தவிதமான முன் ஏற்பாடுகளும் இல்லாமல் பல பயிர்களை விவசாய முயற்சிகளை மேற்கொண்டு பலர் நஷ்டமடைந்த கதைகள் உண்டு. உதாரணமாக கற்றாழை, மஞ்சள், உழுந்து என்பவற்றை குறிப்பிடலாம்.
சரி வாழை ஏற்றுமதி தொடர்பாக முக்கிய தளங்களில் வந்த செய்தியை இங்கு பார்க்கலாம்
டெய்லி நியூஸ்
இலங்கையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் வாழைப் பழங்களின் முதலாவது தொகுதி எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக இலங்கைய விவசாய அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.